கோவை சத்திய நாராயணன் கோவிலில் கருடாழ்வார் பிரதிஷ்டை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2024 10:06
கோவை; ரேஸ்கோர்ஸ் சத்திய நாராயணன் கோவில் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் ஸ்ரீ கருடாழ்வார் பிரதிஷ்டை நடைபெற்றது. இதன் முதல் நிகழ்வாக 15ம் தேதி காலை 5:00 மணிக்கு விநாயகர் பூஜை , வாஸ்து சாந்தி, பூமி பூஜை, ரக்ஷாபந்தனன், கும்ப ஸ்தாபனம், முதற்கால யாக வேள்வி பூஜைகள் நடந்தது. அதைத் தொடர்ந்து சுதர்சன ஹோமம் பூரணாகதி, மகா தீபாரதனை நடைபெற்றது. 16ம் தேதி இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 5 மணிக்கு ஸ்ரீ கருடாழ்வார் சிலை பிரதிஷ்டை நடைபெற்றது. இதில் கருடாழ்வார் மற்றும் ஸ்ரீ சத்திய நாராயண சுவாமி புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.