Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தொடர் விடுமுறை; ராமேஸ்வரத்தில் ... சபரிமலையில் ரூ.80 கோடியில் அமைகிறது ரோப் கார் : மத்திய வன அமைச்சகம் அனுமதி சபரிமலையில் ரூ.80 கோடியில் அமைகிறது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி கோவில்களில் மஹா கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி கோவில்களில் மஹா கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2024
11:06

பொள்ளாச்சி; குண்டலப்பட்டி கூணம்மாள், எள்ளம்மாள், ஸ்ரீரங்கா பெருமாள், ஆத்திமரத்து கருப்பராயன், கன்னிமார் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. நேற்றுமுன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்ரஹ ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், வாஸ்துசாந்தி, கடம் யாக சாலை பிரவேசம், முதற்கால யாக பூஜை, பூர்ணாஹூதி, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், இரண்டாம் கால யாக பூஜை, மஹா பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கடம் எழுந்தருளல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை, 10:30 மணிக்கு மேல், 12:00 மணிக்குள், கூணம்மாள், எல்லம்மாள், ஸ்ரீரங்கப்பெருமாள், ஆத்திமரத்து கருப்பராயன், கன்னிமார் ஆகிய தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அன்னதானம் வழங்கப்பட்டது.

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, காணியாலம்பாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கிணத்துக்கடவு, காணியாலம்பாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி 13ம் தேதி, மங்கள இசையுடன் துவங்கியது. தொடர்ந்து, 14ல், காலை, திருவிளக்கு பூஜை, விக்னேஸ்வர பூஜை, சக்தி அழைத்தல் நிகழ்ச்சிகளும், மாலையில், கும்ப அலங்காரம் மற்றும் முதல் கால யாகமும், இரவு, தீபாராதனை போன்றவை நடந்தன. நேற்றுமுன்தினம் 15ம் தேதி, காலை, சூர்ய பூஜை, தோரண பூஜை, வேதிகார்ச்சனை, இரண்டாம் கால யாகம் நடந்தது. மாலை, மூன்றாம் கால யாகம் நடந்தது. இரவு, வேதபாராயணம், தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது.

நேற்று காலை, நான்காம் கால யாகமும், தொடர்ந்து, கோபுர விமானம், மூலவர், பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும், கும்பாபிஷேக தீர்த்தம் பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டது. பின், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar