Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி கோவில்களில் மஹா ... ஆனைமலை உச்சிமாகாளியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா ஆனைமலை உச்சிமாகாளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் ரூ.80 கோடியில் அமைகிறது ரோப் கார் : மத்திய வன அமைச்சகம் அனுமதி
எழுத்தின் அளவு:
சபரிமலையில் ரூ.80 கோடியில் அமைகிறது ரோப் கார் : மத்திய வன அமைச்சகம் அனுமதி

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2024
12:06

கம்பம்; சபரிமலையில் ௹ 80 கோடி மதிப்பீட்டில் 2.90 கி.மீ. தூரத்திற்கு ரோப் கார் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய வன அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது-

தென் மாநிலங்களில் புகழ் பெற்ற கோயில்களில் சபரிமலை முக்கிய இடம் பிடிக்கிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தென் மாநிலங்களில் இருந்து சென்று ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் நடந்து தான் செல்ல வேண்டும். சன்னிதானத்திற்கு தேவைப்படும் பூஜை பொருள்கள் மற்றும் இதர பொருள்களை கொண்டு செல்வதில் கோயில் நிர்வாகத்திற்கு இடர்பாடுகள் இருந்து வந்தது. எனவே பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு 2.90 கி.மீ. தூரத்திற்கு ரோப் கார் அமைக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது .

இதற்கென வனத்துறை நிலம் 1.5 ஏக்கர் மட்டுமே தேவைப்படுகிறது. தேவைப்படும் வனப்பகுதி 1.5 ஏக்கருக்கு நஸ்ட ஈடாக வனத்துறைக்கு, வருவாய்த்துறை நிலம் 4.53 எக்டர் சின்னக்கானலில் வழங்க தேவசம்போர்டு முன்வந்துள்ளது. வருவாய்த் துறை நிலம், ஏற்கெனவே தேவசம்போர்டு வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. ரோப் கார் செல்லும் பாதையில் 5 இடங்களில் டவர் அமைக்கப்படுகிறது. 40 மீட்டர் முதல் 70 மீட்டர் உயரத்திற்கு இந்த டவர்கள் அமைக்கப்படுகிறது. இதனால் மொத்தத்திற்கு 20 மரங்கள் மட்டும் வெட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . கேரள மாநில அரசின் மூலம் தேவசம் போர்டு கொடுத்துள்ள இந்த திட்டத்திற்கு மத்திய வனம் மற்றும் சுற்றுப் புறச் சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. ௹.80 கோடியில் அமைக்கப்படும் இந்த ரோப் கார் பக்தர்கள் பயன்பாட்டிற்கு அல்ல என்றும், பொருள்களை கொண்டு செல்ல மட்டும் பயன்படுத்தப்படும் என்றும் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. ௹.80 கோடியில் அமையும் இந்த ரோப் கார் கட்டுமான பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அமாவாசை, பௌர்ணமியை அடுத்து வரும் ஐந்தாம் திதி பஞ்சமி ஆகும். வாராஹி அம்மனை வழிபட சிறந்த நாள் பஞ்சமி. ... மேலும்
 
temple news
அயோத்தி : முறையான வடிகால் அமைப்பு செய்யப்படாததால், அயோத்தி ராமர் கோவிலின் கருவறையின் மேற்கூரையில் ... மேலும்
 
temple news
காரைக்குடி; சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை : ஹிந்து கோவில்களில் நிறுவப்பட்டுள்ள சாய்பாபா சிலைகளை அகற்றக்கோரிய வழக்கில், அறநிலையத்துறை ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் நேற்று சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar