Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவின் ஆசீர்வாதத்தால் ... பெருமாநல்லூர் பெருமாள் மற்றும் ஈஸ்வரன் கோவிலில் ஆக மாதம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு பெருமாநல்லூர் பெருமாள் மற்றும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2024
12:06

உடுமலை; பாலப்பம்பட்டி காளியம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

உடுமலை அருகே பாலப்பம்பட்டியில், சித்திவிநாயகர், ஸ்ரீ காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 13ம் தேதி துவங்கியது. முதல் நாளில் காலை விநாயகர் வழிபாடு நடந்தது. தொடர்ந்து கோ பூஜை, குபேர மகாலட்சுமியாகம், தனபூஜை செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. மறுநாள் திருமூர்த்திமலையிலிருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். மாலையில் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசம், வாஸ்துசாந்தி, தீபாராதனை நடந்தது. கடந்த 15ம் தேதி, பக்தர்கள் பாலப்பம்பட்டி விநாயகர் கோவிலிலிருந்து முளைப்பாரி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் கலசங்கள் யாகசாலைக்கு புறப்படுதல், மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, முதற்கால யாக பூஜை, வேதபாராயணம் நடந்தது. நேற்றுமுன்தினம், காலையில் விசேஷ சாந்தி, யாகசாலை பிரவேசம், இரண்டாம் காலயாக பூஜையும், மாலையில் லலிதா சகஸ்ரநாம பாராயணம், மூன்றாம் கால யாகபூஜையும் நடந்தது. இரவில் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலையில் விநாயகர் வழிபாடு, நான்காம் கால யாக வேள்வி, நாடிசந்தானம் நடந்தது. காலை, 6:00 மணிக்கு யாகசாலையிலிருந்து திருக்குடங்கள் கோவிலை வலம் வந்து சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மகா அபிஷேகம், தசதரிசனம் நடந்தது. பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கபட்டது. கும்பாபிஷேக விழாவையொட்டி, வள்ளி கும்மியாட்டம் மற்றும் இசைநிகழ்ச்சிகளும் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி இன்று 9ம் நாளில் காந்திமதி ... மேலும்
 
temple news
கோவை; கோவை பொள்ளாச்சி - ரோடு ரத்தினம் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் -வாராகி அம்மன் கோவிலில் ஐப்பசி ... மேலும்
 
temple news
களியக்காவிளை, செங்கல் சிவபார்வதி கோவிலில் புதிதாக கட் டப்பட்ட தேவலோகம் திறப்பு விழா நடந்தது. தமிழக- ... மேலும்
 
temple news
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி சின்னாம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக ... மேலும்
 
temple news
கோவை; சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar