கோவை; சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுஸ் யூனிட் பேஸ் - 1 ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் ஆனி மாதம் முதல் புதன்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலில் உள்ள லட்சுமி நாராயண பெருமாளுக்கு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏலக்காய் மாலை அணிந்து பெருமாள் மற்றும் தாயார் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.