Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் ... விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நல்ல எண்ணங்களை உருவாக்குவதே சிறந்த தர்மம்; காஞ்சி விஜயேந்திரர்
எழுத்தின் அளவு:
நல்ல எண்ணங்களை உருவாக்குவதே சிறந்த தர்மம்; காஞ்சி விஜயேந்திரர்

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2024
10:06

காஞ்சிபுரம்; காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இரண்டு ஆண்டுகள் வட இந்திய விஜய யாத்திரை நிறைவு செய்து, கடந்த மார்ச் 20ம் தேதி, காஞ்சிபுரம் சங்கரமடத்திற்கு வருகை தந்தார். அன்று முதல், சங்கரமடத்தில் சந்திரமவுலீஸ்வரர் பூஜை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை, காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள மஹா பெரியவா மணிமண்டபத்தில், சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சந்திரமவுலீஸ்வரர் பூஜை செய்வதற்காகவே அமைக்கப்பட்ட பூஜா மண்டபத்திற்கு சென்றார். முன்னதாக, மணி மண்டப நுழைவு வாயிலில் மண்டபத்தின் நிர்வாக அறங்காவலர் மணி ஐயர் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

விஜயேந்திரர் அருளுரை: காஞ்சிபுரம் அடுத்த வேடல் கிராமத்தில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் உருவாக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் கண்காட்சி உள்ளது. அந்த ஓலைச்சுவடிகளில் பல தத்துவ சாஸ்திரங்கள் நிரம்பியிருக்கின்றன. அவற்றை நாம் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். எண்ணங்களே மனிதனை உருவாக்குகின்றன. நல்ல எண்ணங்களை உருவாக்குவதே சிறந்த தர்மம் இவ்வாறு அவர் அருளுரையாற்றினார். காஞ்சி சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், ஸ்ரீகாரியம் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி உட்பட பலர் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar