Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 2,500 அடி உயரத்தில் அருள்பாலிக்கும் ... சங்கடஹர சதுர்த்தி; பிரசன்ன மகாகணபதி கோவிலில் சிறப்பு வழிபாடு சங்கடஹர சதுர்த்தி; பிரசன்ன மகாகணபதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை நிறைகுளத்து அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
மானாமதுரை நிறைகுளத்து அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2024
05:06

மானாமதுரை; மானாமதுரை அருகே ஏ.விளாக்குளம் கிராமத்தில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும்,கிராம மக்கள் ஒற்றுமைக்காகவும் நிறைகுளத்து அய்யனார் கோயிலில் வருகிற புரவி எடுப்பு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மேள, தாளங்கள், டிரம்செட் முழங்க புரவிகளை தூக்கி சென்றனர்.

மானாமதுரை அருகே ஏ.விளாக்குளம் கிராமத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார் கோயிலில் 2 வருடங்களுக்கு ஒருமுறை ஆனி மாதம் நடைபெறும் புரவி எடுப்பு திருவிழா வழக்கம்.இந்த வருடம் திருவிழாற்காக ஏராளமானோர் கடந்த வாரம் முதல் காப்பு கட்டி விரதமிருந்து வருகின்றனர்.மானாமதுரையில் மண்பாண்ட தொழிலாளர்களால் ஏராளமான புரவிகள் மற்றும் சுவாமி சிலைகள், மனித உருவங்கள் செய்யும் பணிகள் முடிவு பெற்றதை தொடர்ந்து இன்று காலை ஏ.விளாக்குளம் கிராமத்திலிருந்து கிராம மக்கள் ஊர்வலமாக மானாமதுரைக்கு வந்து புரவிகளுக்கு பூஜை செய்த பின்னர் மாலை 4:45 மணிக்கு மேளதாளங்கள்,ட்ரம் செட் முழங்க ஏராளமானோர் மானாமதுரையிலிருந்து புரவிகளையும், சுவாமி சிலைகளையும் தலைச்சுமையாக சுமந்து ஊர்வலமாக நடந்து சென்று நிறைகுளத்தை அய்யனார் கோயிலில் செலுத்திய பிறகு அபிஷேக,ஆராதனை, தீபாராதனை நடைபெற்றது.புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு கோயில் முன்பாக தினம்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.வருகிற 27ம் தேதி அய்யனார் கோயில் திடலில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியும், 28ம் தேதி காலை 6:00 மணிக்கு மாட்டுவண்டி எல்கை பந்தயமும் நடைபெற உள்ளது.திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஏ.விளாக்குளம் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar