சமயபுரம் மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி முளைக்கொட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2024 04:06
திருப்புல்லாணி, திருப்புல்லாணியில் உள்ள இந்திரா நகரில் சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளது. 20ம் ஆண்டு முளைக்கொட்டு உற்ஸவ விழாவை முன்னிட்டு கடந்த ஜூன் 15 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் மூலவர் சமயபுரம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நேற்று இரவு அக்னி சட்டி, வேல் காவடி, பால்குடம் உள்ளிட்ட நேர்த்திக்கடன் பூஜைகளை பக்தர்கள் நிறைவேற்றினர். இன்று காலையில் மூலவர் அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பெண்கள் பொங்கலிட்டனர். மாவிளக்கு எடுத்து வழிபாடு செய்தனர். மாலையில் அம்மன் கரகம் முன்னே செல்ல நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரியை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று சேதுக்கரை அருகே கொட்டகுடி ஆற்றில் பாரியை கங்கை சேர்த்தனர். ஏற்பாடுகளை திருப்புல்லாணி இந்திரா நகர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.