மேலுார்; அரிட்டாபட்டியில் செங்குண்டு அய்யனார் ஆனிமாத புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் பக்தர்கள் புரவிகளை வெள்ளச்சி ஆயி அம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக அய்யனார் கோயிலுக்கு கொண்டு சென்றனர். நேற்று அரிட்டாபட்டியில் உள்ள மழட்டழகி தர்மம் என்னும் குளத்தில் பெண்கள் புதிய மண்பானையில் தீர்த்தம் எடுத்து வந்து வெள்ளச்சிஆயி அம்மன் கோயில் முன்பு 300 க்கும் மேற்பட்ட கோழிகளை வெட்டி பொங்கல் வைத்தனர். பிறகு சுடு மண்பானையில் கறி குழம்பு சமைத்து பானையை தலையில் சுமந்து சென்று செங்குட்டு கண்மாயில் உள்ள குப்பச்சி திடலில் கறி விருந்து பரிமாறப்பட்டது. இத்திருவிழாவில் 3000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.