நெல்லையப்பர் கோயில் வெள்ளி தேர் செய்ய 450 கிலோ வெள்ளிக் கட்டிகள் தேவை; உபயதாரர்களுக்கு அழைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2024 01:07
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயில் புதிய வெள்ளித் தேர் செய்ய 450 கிலோ வெள்ளி தேவைப்படுவதாகவும், உபயதாரர்கள் தங்களால் முயன்ற வெள்ளியை கோயிலில் வழங்கலாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ‘திருநெல்வேலி’ எனப்பெயர் வரக்காரணமாக அமைந்த புராண சிறப்பு பெற்ற காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலில் தங்கத் தேர் ஏற்கனவே உள்ளது. கோயிலில் இருந்த வெள்ளித் தேர்எரிந்து போனது. புதிய வெள்ளித் தேர் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான அனுமதியையும் அறநிலையத்துறை வழங்கியுள்ளது.
வெள்ளித் தேர்செய்வதற்கு முன்பாக மரத்தேர் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இன்னும் 2 வாரங்களில் மரத்தேர்பணிகள் முழுதும் முடிவடைந்து விடும். மரத்தேருக்கான முழு பொறுப்பையும் ஆர்.எம்.கே.வி., ஜவுளி நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. 450 கிலோ வெள்ளி தேவை வெள்ளித் தேருக்கு தேவையான வெள்ளியையோ அல்லது அதற்கான பணத்தையோ நெல்லையப்பர் கோயிலில் வழங்கலாம் எனகோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. எனவே தேருக்கு தேவையான வெள்ளியை கொடுத்து, தங்கத் தேர்பணிகள் முடிக்க ஒத்துழைப்பு அளித்தது போல் வெள்ளித் தேர்பணிகளையும் முடிக்க பக்தர்கள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனஅறங்காவலர் குழுத்தலைவர் செல்லையா கேட்டுக் கொண்டுள்ளார்.