Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் ... கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகை விழா கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனி பெருந்திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனி பெருந்திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2024
01:07

ஏரல்; குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிப் பெருந்திரு விழாவை முன்னிட்டு நேற்று கோயிலில் கால் நாட்டு நிகழ்ச்சி நடந்தது. தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலின் இந்தஆண்டு ஆனி பெருந்திருவிழா வரும்16ம்தேதி நடக்கிறது. இதைமுன்னிட்டு நேற்று கோயிலில் கால்நாட்டப்பட்டது. மதியம்1:00 மணிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜையை தொடர்ந்து ஊர் பெரியவர்கள், பக்தர்கள் முன்னிலையில் கால் நாட்டப்பட்டது. இதில் சென்னை, கோவை, குரங்கணி வாழ் நாடார் சங்கத்தினர். சுற்றுவட்டார கிராம மக்கள், ஏரல் பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குரங்கணி 60 பங்கு நாடார் 

பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர்கலந்து கொண்டனர். 


ஆனிப்பெரும் திருவிழா சிறப்பு பூஜை: ஆனிப் பெருந்திரு விழா நிகழ்ச்சிகள் வரும்14ம்தேதி முதல் ஆரம்பமாகிறது. அன்று காலை நாதஸ்வர கச்சேரி, பக்தி பாடல்கள், வில்லிசை நடக்கிறது. 15ம்தேதி பட்டிமன்றம், இரவு இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று இரவு 1:௦௦ மணிக்கு சிறப்பு பூஜை மற்றும்அதைத் தொடர்ந்து ஸ்ரீநாராயண சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. 16ம்தேதி ஆனிப் பெருந்திருவிழா அன்று மதியம் 1:௦௦ மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இரவு 8 மணிக்கு கயிறு சுற்றி ஆடுதல், 10 மணிக்கு மாவிளக்கு பெட்டி எடுத்து வருதல் ஆகிய நிகழ்ச்சிகளும்அன்று இரவு 1:௦௦ மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. அதைத்தொடர்ந்து ஸ்ரீ நாராயண சுவாமி திருவீதி வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும்14ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் 17ம்தேதி (புதன்கிழமை) இரவு 9 மணி வரை கோயில் நடைதிறந்திருக்கும். திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம் மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.  ஏற்பாடுகளை செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் குரங்கணி 60 பங்கு நாடார் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
ஒடிசா:  பிரசித்திப் பெற்ற புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையின் இரண்டாம் நாளான இன்று லட்சக்கணக்கான ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நடப்பு ஆண்டுக்கான வியாச ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் வி. என். தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆனி மாதம் நான்காவது திங்கட்கிழமையை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; திண்டுக்கல் எம்.வி.எம்.நகர் தென் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் சக்கரத்தாழ்வார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar