ராஜராஜ சோழன் கால சிவன் கோவிலில் உண்டியலை உடைந்து திருட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2024 02:07
காரைக்கால், காரைக்காலில் ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் சிவன் கோவில் உண்டியல் திருட்டப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
காரைக்கால் மாவட்டத்தில் ராஜாராஜ காலங்களில் பழமையான கோவில் நெடுங்காடு பகுதியில் திருநள்ளாறு சாலையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான பிரசித்தி பெற்ற ஸ்ரீ நெடுந்துயர் தீர்த்த நாயகி சமேதி தான்தோன்றீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் மூன்றாம் குலோத்துங்க சோழனால் சுமார் 1360ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது.இக்கோவில் தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழப்புரம் உள்ளிட்ட முக்கிய பெரிய கோவில்கள் போல் திகழ்ந்து வருகிறது.இக்கோவில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கட்டுப்பட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெடுங்காடு காமராஜர் சாலை சேர்ந்த சீனிவாசன் என்பவர் கோவிலில் காவலராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2ம் தேதி வழக்கம் போல இரவு கோவில் நடைமூடப்பட்ட நிலையில் மறுநாள் வழக்கம் போல் காலை கோவில் திறக்கப்பட்ட நிலையில் சிவன் சன்னதியில் கதவு திறந்த நிலையில் கோவில் உள்ள உண்டியலை மர்மநர்கள் உடைந்து பணத்தை திருடியது தெரியவந்தது. இதுக்குறித்து நெடுங்காடு காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சப்.இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திருட்டு குறித்து தீவிராக விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போலீசார் தடையவியல் நிபுனர்கள் மூலம் கோவில் உண்டியல் திருட்டு மற்றும் சுவாமி சிலைகள் உள்ளதா குறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட கோவில் உண்டியல் உடைக்கப்பட்ட சம்பவ பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.