Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 4 ஆண்டுகளாக சீரமைக்காத சோளீஸ்வரர் ... ராஜராஜ சோழன் கால சிவன் கோவிலில் உண்டியலை உடைந்து திருட்டு ராஜராஜ சோழன் கால சிவன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடும் வெயில்; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் அவதி.. கண்டுகொள்ளாத அறநிலையத் துறை
எழுத்தின் அளவு:
கடும் வெயில்; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் அவதி.. கண்டுகொள்ளாத அறநிலையத் துறை

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2024
02:07

அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கடும் வெயிலில் கால் கடுக்க நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


அமாவாசை தினமான இன்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் குவிந்தனர். கோவில் உள்பிரகாரத்தில் ஸ்வாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு நிழலில் நிற்பதற்கான தகர செட், பக்தர்கள் வரிசையில் வருவதற்கான கியூ அமைத்தல் உள்ளிட்ட சிறப்பு முன்னோர்பாடுகள் என, எதுவும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யவில்லை. ஸ்வாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள் இரண்டாம் பிரகாரத்தில், கடும் வெயிலால் நிற்க முடியாமல் நிழலுக்காக உள்பிரகார மதில் சுவரை ஒட்டி நின்றனர். மேலும், கடந்த பிப்ரவரி மாதம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா முடிந்த பிறகு ஒவ்வொரு விஷேச தினத்திலும் ஸ்வாமி தரிசனம், திதி, தர்ப்பணம் கொடுப்பதற்கும் பக்தர்கள் அதிக அளவில் கோவிலுக்கு வருகின்றனர். ஆனால், கோவில் நிர்வாகம் டூவீலர், கார் உள்ளிட்ட வாகன பார்க்கிங்க்கு மட்டும் அதிக அளவில் வாகனங்கள் வந்தால் நிறுத்துவதற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்கின்றனர். பக்தர்கள் கொண்டு வரும் அன்னதானத்தை கொடுப்பதற்கும் கூட கோவிலுக்கு வெளியே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி கொடுக்க வேண்டும் என கறாராக கோவில் பணியாளர்கள் நடந்து கொள்கின்றனர் என பக்தர்கள் வேதனைப்படுகின்றனர். பல மணி நேரம் வெயிலில் கால் கடுக்க காத்திருந்து சாமி தரிசனம் செய்வதற்கு நின்றாலும், அறநிலையத்துறையினரின் செயலால் மன அமைதி மற்றும் நிம்மதி இல்லாமல் போகிறது என்கின்றனர் பக்தர்கள். மேலும், குழந்தைகள், முதியவர்களுடனும் வந்திருந்தவர்களில் ஒரு சிலர் வெயிலில் நிற்க முடியாமல் மாலையில் வந்து தரிசனம் செய்து கொள்ளலாம் என திரும்பிச் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar