பதிவு செய்த நாள்
08
ஜூலை
2024
12:07
காஞ்சிபுரம்; உத்திரமேரூர் கிராம தேவதை மஹாசக்தி மாதிரியம்மன் கோவிலில் 42வது ஆண்டு மஹோத்ஸவம் நேற்று துவங்கியது. இதில், காலை 5:00 மணிக்கு ராஜப்பா குருக்கள், லட்சுமி மஹா கணபதி பூஜை நடத்தி வைத்தார்.
காலை 11:00 மணிக்கு எல்லத்தரசி அம்மனுக்கு அபிஷேக அலங்காரமும், மதியம் 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று, காலை 7:00 மணிக்கு சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து, பால்குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. நாளை, காலை 8:00 மணிக்கு ஜலம் திரட்டுதலும், மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தலும், மாலை 3:00 மணிக்கு அம்மனுக்கு ஊரணி பொங்கல் வைத்தல் நடைபெறும். இரவு 7:00 மணிக்கு கும்பம் படையலிடப்பட்டு அம்மன் வர்ணிப்பும், இரவு 10:00 மணிக்கு செஞ்சி ராஜா தேசிங்கு நாடக குழுவினரின் நாடகம் நடைபெறுகிறது. இரவு 10:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் எழுந்தருளும் மாதிரியம்மன் முக்கிய வீதி வழியாக உலா வருகிறார்.