பதிவு செய்த நாள்
08
ஜூலை
2024
12:07
சென்னை; இஸ்கான் என அழைக்கப்படும், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம், ஆண்டுதோறும் சென்னையில் ஜெகன்நாதர் ரத யாத்திரையை நடத்தி வருகிறது. இந்தாண்டு, 44வது ஜெகன்நாதர் ரத யாத்திரை, நேற்று இ.சி.ஆர்., பாலவாக்கத்தில் இருந்து துவங்கியது. இதில், சிறப்பு விருந்தினராக பக்தி வினோத சுவாமி மகராஜ் பங்கேற்றார். அங்கிருந்து, நீலாங்கரை, வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கம், அக்கரை வழியாக, இஸ்கான் கோவிலுக்கு ரதம் வந்தடைந்தது. தொடர்ந்து, பிரபுபாதா தியேட்டர் சார்பில், நீலா மாதவ் நாடகம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.