Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மடப்புரம் காளி கோயிலில் சேதமடைந்த ... உடுமலை ஆனந்தசாயி கோவிலில் குருபூர்ணிமா உற்சவம் உடுமலை ஆனந்தசாயி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் திருடி பதுக்கி வைத்திருந்த அம்மன் உலோக சிலைகள் மீட்பு; நான்கு பேர் கைது
எழுத்தின் அளவு:
கோவில்களில் திருடி பதுக்கி வைத்திருந்த அம்மன் உலோக சிலைகள் மீட்பு; நான்கு பேர் கைது

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2024
11:07

சென்னை; கோவில்களில் திருடி, கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கலாம் என, வீட்டில் பதுக்கி வைத்திருந்த, இரண்டு அம்மன் உலோக சிலைகள் மற்றும் உடைவாள் ஒன்றை, போலீசார் பறிமுதல் செய்தனர். நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை அடையாறு சாஸ்திரி நகரில், சுமதி வீட்டில், பழங்கால சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி., சைலேஷ்குமார் யாதவுக்கு தகவல் கிடைத்தது. போலீசார், சுமதி வீட்டில் சோதனை செய்தனர்.


அங்கு ரகசிய அறையில், உலோகத்தாலான நாகாத்தம்மன் உட்பட 2 அம்மன் சிலைகள், உடைவாள் ஒன்றும் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை மீட்ட போலீசார், சுமதி, அவரது கணவர் பிரகாஷிடம் விசாரித்தனர். அப்போது, ‘சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி,40; தங்கராஜ்,40; சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன்,42, கோவிலில் இருந்து சிலைகள் மற்றும் உடைவாளை திருடி வந்து எங்களிடம் கொடுத்தனர். சக்தி வாய்ந்த அம்மன் சிலைகள் மற்றும் உடைவாளை விற்றால், கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும்; ரகசியமாக பதுக்கி வைக்கும்படி கூறினர்; அதன்படி செய்தோம்’ என்று கூறினர். சுமதி, பிரகாஷ் உள்ளிட்டோர் மீது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சுமதி, பிரகாஷ், கலியமூர்த்தி, தங்கராஜ் ஆகியோரை கைது செய்து, புழல் சிறையில் நேற்று அடைத்தனர். தேடப்பட்டு வரும் ராஜேஷ் கண்ணன், ஏற்கனவே சிலை திருட்டு தொடர்பாக கைதாகி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar