Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாய் பிரசாந்தி நிலையத்தில் குரு ... கோவில்களில் திருடி பதுக்கி வைத்திருந்த அம்மன் உலோக சிலைகள் மீட்பு; நான்கு பேர் கைது கோவில்களில் திருடி பதுக்கி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடப்புரம் காளி கோயிலில் சேதமடைந்த சிலைகள்; பக்தர்கள் வேதனை.. அலட்சியம் காட்டும் அறநிலையத்துறை
எழுத்தின் அளவு:
மடப்புரம் காளி கோயிலில் சேதமடைந்த சிலைகள்; பக்தர்கள் வேதனை.. அலட்சியம் காட்டும் அறநிலையத்துறை

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2024
11:07

திருப்புவனம்; பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உள்ள சேதமடைந்த சிலைகளில் பராமரிப்பு பணிகள் செய்யாமல் வேஷ்டி, சேலைகளை வைத்துமறைப்பதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று, தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடி மாதம் மற்றும் விசேச தினங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும், எதிரிகளை பழிவாங்க காசு வெட்டிப் போடும் பழக்கமும் இங்கு உண்டு, சிவபெருமான் மதுரை நகரின் எல்லையை கண்டறிய தனது கழுத்தில் உள்ள பாம்பை வீசிய போது தலையும் வாலும் சேர்ந்த இடமே மடப்புரம் என்று அழைக்கப்படுகிறது. இரு மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல் காணிக்கை மூலம் நாற்பது லட்ச ரூபாய் அளவிற்கு பக்தர்கள் மூலம் வருவாய் கிட்டுகிறது. இதுதவிர தங்கம், வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகள் என தனியாக ஏராளமாக வருவாய் கிடைத்து வருகிறது. அறநிலையத்துறைக்கு வருவாயை ஈட்டி தரும் கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று, இங்கு கடந்த 2017 ஆண்டு ஜூன் 4 ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட சில ஆண்டுகளிலேயே அம்மனின் குதிரை வாகனத்தின் கீழே இருக்கும் பூதகணங்களின் சிலைகள் சேதமடைந்தன. அதே போல அம்மனின் குதிரை வாகனமும், அய்யனார் கோயிலில் உள்ள கோபுர சிலைகள் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. கும்பாபிஷேகத்திற்காக எடுத்து வைக்கப்பட்ட பல சிலைகள் மீண்டும் வைக்கப்படவே இல்லை.சேதமடைந்த சிலைகளை பராமரிப்பு செய்யாமல் அவற்றை வேஷ்டி, சேலை வைத்து மறைத்து அலங்காரம் செய்து பக்தர்களை ஏமாற்றுகின்றனர். அம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பொருட்களை விசேச தினங்களில் கூட அணிவிப்பதில்லை. வருமானத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு அறநிலையத்துறை செயல்படுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது ஆடி மாதம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. சேதமடைந்த சிலைகளை கண்டு பக்தர்கள் மனம் வெதும்பி செல்கின்றனர். எனவே அறநிலையத்துறை சேதமடைந்த சிலைகளை புதுப்பிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar