திருத்தணி ஆடிக்கிருத்திகை; திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 29ல் உள்ளூர் விடுமுறை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2024 04:07
திருவள்ளூர்; திருத்தணி ஆடிக்கிருத்திகை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில், வரும் 29ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 29ல் ஆடிக்கிருத்திகை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில், பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. கருவூலம், சார்நிலைக் கருவூலம், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு 29ல் செயல்பட வேண்டும். இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் பொருட்டு, ஆக.10 சனிக்கிழமை பணிநாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.