ஆடி கிருத்திகை; பழநியில் குவிந்த பக்தர்கள்.. காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2024 11:07
பழநி; பழநி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.
ஆடிக்கார்த்திகையையொட்டி பழநி கோயிலில் மலர் காவடிகளுடன் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். வின்சில் செல்ல 4 மணி நேரம் காத்திருந்தனர். ஆடிக்கார்த்திகையையொட்டி அதிகாலை 4 மணிக்கு மலைகோயில் சன்னதி திறக்கப்பட்டது. மலர் காவடி கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது ஆடிக்கார்த்திகையின் சிறப்பாகும். அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் மலர் காவடிகளுடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். படிப்பாதையில் பக்தர்கள் படிபூஜை செய்தனர். மலைகோயில் கார்த்திகை மண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
காற்றின் வேகம் அதிகரித்தால் ரோப்கார் சேவை பாதிக்கப்பட்டது.பழநி முருகன் கோயிலில் வின்ச் மூலம் கோயில் செல்ல பல மணி நேரம் காத்திருந்து சென்றனர். காற்றின் வேகம் அதிகரித்ததால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி ரோப் கார் சேவை மாலை 5:00 மணி வரை தடைபட்டது. சுவாமி தரிசன வரிசையில் செய்ய கோயிலில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். அய்யம்புள்ளி ரோடு பகுதியில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படவில்லை. பூங்கா ரோடு, அருள் ஜோதி வீதி பகுதிகளில் போலீசார் வாகனங்களை நிறுத்தும் இடங்களை முறைப்படுத்தினர்.