Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாண்டிக்குடி மந்தை காளியம்மன் ... ஊர்க்காவலன் சுவாமி கோயிலில் ஆடி தீர்த்த உற்சவ விழா ஊர்க்காவலன் சுவாமி கோயிலில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர் பாதங்கள் சுவாமியை தூக்கி நடக்க ரோடு வசதி இல்லை; டிராக்டரில் எழுந்தருளிய நவநீத பெருமாள்
எழுத்தின் அளவு:
சீர் பாதங்கள் சுவாமியை தூக்கி நடக்க ரோடு வசதி இல்லை; டிராக்டரில் எழுந்தருளிய நவநீத பெருமாள்

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2024
11:07

மானாமதுரை அருகே ரோடு வசதி இல்லாத காரணத்தினால் ஊரை காலி செய்யும் கிராம மக்கள், ரோடு வசதி இல்லாததால் புதுமையான முறையில் டிராக்டரில் எழுந்தருளிய நவநீத பெருமாளை வழிபட்ட கிராம மக்கள்.


மானாமதுரை; மானாமதுரை அருகே குன்றாமணியேந்தல் கிராமத்தில் ரோடு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால் கிராம மக்கள் ஊரை காலி செய்து வருகிற நிலையில் சீர் பாதங்கள் சுவாமியை தூக்கி நடக்க முடியாத சூழ்நிலையால் திருக்கூடல்மலை நவநீத பெருமாள் புதுமையான முறையில் டிராக்டரில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வாகுடி அருகே உள்ள கிராமம் குன்றாமணியேந்தல். இக்கிராமத்தில் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வந்த நிலையில் வறட்சி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால் இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிழைப்பு தேடி வெளியூர்களுக்கு சென்று விட்டனர்.இந் நிலையில் ஒரு சில குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் இந்த ஊரில் வசித்து வருகின்றனர். வருடம் தோறும் ஆடி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை நவநீத பெருமாள் சுவாமி இக்கிராமத்தில் உள்ள கோயில்களுக்கு எழுந்தருளி விதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.இந்நிலையில் இந்த வருடம் குன்றாமணியேந்தல் கிராமத்திற்கு நவநீத பெருமாள் எழுந்தருளிய நிலையில் இக்கிராமத்தில் ரோடு வசதி இல்லாத காரணத்தினால் எப்போதும் பூப்பல்லக்கு மற்றும் குதிரை வாகனத்தில் செல்லும் சுவாமியை இம்முறை சீர் பாதங்கள் எனப்படும் சுவாமி பல்லக்கு மற்றும் வாகனங்களை தூங்குபவர்கள் புதுமையான முறையில் டிராக்டரில் அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கை ஏற்றி அங்குள்ள கோயில்களுக்கு கொண்டு சென்றனர்.


இது குறித்து குன்றாமணியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த நீலமேகம் கூறியதாவது, இக்கிராமத்தில் கடந்த 50 வருடங்களுக்கு முன்பு ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வந்த நிலையில் வறட்சி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால் ஏராளமான குடும்பங்கள் பிழைப்பு தேடி வெளியூர் சென்றுவிட்டனர். இந்நிலையில் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே உள்ள நிலையில் வருடம் தோறும் இக்கிராமத்திற்கு எழுந்தருளும் நவநீத பெருமாளை வெளியூர்களில் வசிக்கும் இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து வரவேற்று சுவாமியை வழிபட்டு வருகிறோம்.இந்நிலையில் இந்த வருடம் சுவாமியை தூக்கிக்கொண்டு சீர் பாதங்கள் நடக்க முடியாத நிலையில் டிராக்டரில் பூப்பல்லக்கை தூக்கி வைத்து சுவாமி வீதியுலா நடைபெறுகிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் கிராம மக்களின் நலன் கருதி ரோடு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் இங்கிருந்து காலி செய்த கிராம மக்கள் மீண்டும் இக்கிராமத்திற்கு வருவதற்கு தயாராக உள்ளதால் உடனடியாக அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
திருக்குறுங்குடி; திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் 9 நாட்கள் நடந்து வந்த பவித்ர உற்சவம் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி, திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ஊராட்சிக்குட்பட்ட பள்ளப்பச்சேரி கிராமத்தில் உள்ள ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அருள்மிகு தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருக்கோயிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
கோவை; தாமஸ் வீதி - தெலுங்கு வீதி சந்திப்பில் அமைந்துள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் புரட்டாசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar