கூறைநாடு காமாட்சி அம்மன் கோயிலில் பூணூல் அணியும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2024 12:08
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் ஆவணி அவிட்டத்தையொட்டி கூறைநாடு காமாட்சி அம்மன் கோயிலில் இன்று நடைபெற்ற விஸ்வகர்ம சமுதாய மக்கள் பூணூல் அணியும்; விழாவில், நூற்றுக்கு மேற்பட்டோர் ஓரே இடத்தில் கூடி பூணூல் மாற்றிக்கொண்டனர். மயிலாடுதுறை கூறைநாட்டில் விஸ்வகர்ம சமுதாய மக்களுக்குச் சொந்தமான காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. ஸ்ரீவிஸ்வ பிரம்மா, காயத்ரி தேவி எழுந்தருளியுள்ள இக்கோயிலில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு 107-வது ஆண்டு பூணூல் அணியும் விழா இன்று நடைபெற்றது. கோயில் தக்கார் கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தினர், விஸ்வகர்ம இளைஞரணி நிர்வாகிகள், கைவினைஞர்கள் தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள், ஸ்ரீவிஸ்வகர்ம சமூகத்தினர் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கோயிலில் ஒரே இடத்தில் கூடி அமர்ந்து, ஆசமனம் மற்றும் காயத்ரி மந்திரம் கூறி மரபுப்படி பழைய பூணூலை மாற்றி புதிய பூணூல் அணிந்து கொண்டனர். இதுபோல சீர்காழி திருநகரி குத்தாலம் ஒரு லிட்டர் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பூணூல் மற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.