திருப்புவனம்; திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. திருப்புவனத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. ஏற்கனவே பழைய கட்டடம் இருந்த இடத்தில் செல்வவிநாயகர் ஆலயம் அமைந்திருந்தது. புதிய கட்டடத்திற்காக செல்வ விநாயகர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு இன்று காலை கும்பாபிஷேகவிழா வெகு சிறப்பாக நடந்தது. கும்பாபிஷேகத்தை செந்தில் பட்டர், தலைமையில் அசோக் பட்டர், விவேக் பட்டர், விக்னேஷ்பட்டர் ஆகியோர் நடத்தி வைத்தனர். கும்பாபிஷேக விழாவில் ஒன்றிய குழு தலைவர் சின்னையா, துணை தலைவர் மூர்த்தி, பி.டி.ஓ.,க்கள் பாலசுப்ரமணியன், அருள்பிரகாசம், மேலாளர் குமரேஸ்வரன், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.