Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனன்யாஸ் நானா நானி ஹோமில் கிருஷ்ண ... செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் கோயிலில் சிறப்பு பூஜை செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க மீண்டும் நந்தினி நெய் வினியோகம்
எழுத்தின் அளவு:
திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க மீண்டும் நந்தினி நெய் வினியோகம்

பதிவு செய்த நாள்

30 ஆக
2024
11:08

பெங்களூரு; திருமலை ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், மீண்டும் நந்தினி நெய் சப்ளையை துவங்கியுள்ளது.

திருப்பதி – திருமலை ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க, பல ஆண்டுகளாக கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், நந்தினி நெய் வினியோகித்து வந்தது. நெய் விலையை குறைத்து தரும்படி, திருமலை – திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்தது. இதற்கு கே.எம்.எப்., சம்மதிக்கவில்லை. ‘சுவை, தரத்தில் நந்தினி நெய் உயர்தரமானது. எந்த காரணத்தை கொண்டும், விலையை குறைப்பது என்ற பேச்சுக்கே இடம் இல்லை’ என, திட்டவட்டமாக கூறிவிட்டது. இது தொடர்பாக, பல சுற்று பேச்சு நடந்தது. கே.எம்.எப்., பிடிவாதத்தை தளர்த்தவில்லை. எனவே தேவஸ்தானம் நிர்வாகம், நெய் வினியோகிக்கும் டெண்டரை, வேறு நிறுவனத்துக்கு கொடுத்தது. மூன்று ஆண்டுகளாக கே.எம்.எப்.,பிடம் நெய் வாங்கவில்லை. இந்நிலையில், சமீபத்தில் ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து, மீண்டும் நந்தினி நெய் வாங்குவதற்கான பேச்சு நடந்தது. இதில், சுமுக முடிவு எட்டப்பட்டது.

இந்நிலையில், நந்தினி நெய்யை ஏற்றி திருமலைக்கு புறப்பட்ட டேங்கர் லாரியை முதல்வர் சித்தராமையா, நேற்று முன்தினம் கிருஷ்ணா இல்லத்தில் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இது குறித்து, கே.எம்.எப்., நிர்வாக இயக்குனர் ஜெகதீஷ் கூறியதாவது: திருமலையில் லட்டு தயாரிக்க, முன்பு நந்தினி நெய் பயன்படுத்தப்பட்டது. சில காரணங்களால் மூன்று ஆண்டுகளாக நெய் வினியோகிப்பது நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் நெய் சப்ளை செய்யும்படி, கோரிக்கை வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது முதல் கட்டமாக, ஒரு டேங்கரில் 20,000 லிட்டர் நெய் அனுப்பி வைத்தோம். வரும் வாரம் மூன்று முதல் நான்கு டேங்கர்களில், நெய் அனுப்புவோம். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று நடைபெற்ற ஆனி திருமஞ்சன தரிசன விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவினையொட்டி நடராஜர், ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.ஆதியும் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா நடந்தது. இன்று காலை 4:00 ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித்திருவிழாவை முன்னிட்டு கோயிலில் கம்பம் ஊன்றும் விழாவிற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar