Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேம்பார்பட்டி கோயில் திருவிழாவில் ... கஞ்சமலை சித்தேஸ்வர ஸ்வாமி கோயில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடும் விழா கஞ்சமலை சித்தேஸ்வர ஸ்வாமி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்பை வைத்தியநாத பாகவதர் ஜெயந்தி: சங்கீத உற்சவம் நிறைவு
எழுத்தின் அளவு:
செம்பை வைத்தியநாத பாகவதர் ஜெயந்தி: சங்கீத உற்சவம் நிறைவு

பதிவு செய்த நாள்

01 செப்
2024
04:09

பாலக்காடு; செம்பை வைத்தியநாத பாகவதரின் 128வது பிறந்த நாளை முன்னிட்டு, இரு நாட்களாக நடந்த சங்கீத உற்சவம் நிறைவடைந்தது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டாயி அருகே உள்ளது செம்பை கிராமம். இங்கு வாழ்ந்த செம்பை வைத்தியநாத பாகவதர், தன் வாழ்க்கையை இசைக்காக அர்ப்பணித்தவர். அவரது பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் சங்கீத உற்சவத்துடன் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, இரு நாட்கள் சங்கீத உற்சவம்  துவங்கியது. விழாவை கேரளா உயர் நீதிமன்ற நீதிபதி குஞ்சிகிருஷ்ணன் துவக்கி வைத்தார். தொடர்ந்து இளம் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடந்தன.

இன்று காலை 8:15 மணி முதல் இசைக் கலைஞர்களின் சங்கீத ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து 11:45 மணிக்கு, செம்பை வித்யாபீடத்தின் 38வது ஆண்டு மாநாட்டை ஆலத்தூர் தொகுதி எம்.பி., ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். தரூர் தொகுதி எம்.எல்.ஏ. சுமோத் தலைமை வகித்தார். பாலக்காடு தொகுதி எம்.பி., ஸ்ரீகண்டன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் செண்டை மேளம் வித்வான் கல்லூர் ராமன்குட்டி மாரார் கவுரவிக்கப்பட்டார். உற்சவ கமிட்டி தலைவர் செம்பை சுரேஷ், செயலாளர் கீழத்தூர் முருகன் ஆகியோர் பேசினர்.

துவக்கவுரையில் எம்.பி. ராதாகிருஷ்ணன் கூறியதாவது: செம்பை வைத்தியநாத பாகவதர் சாதி, மத எல்லையின்றி இசையைக் கற்று கொடுத்த மாபெரும் மனிதர். இசை மற்றும் இலக்கியம் உள்ளவர்களால் தான் நல்லது செய்ய முடியும். அவர்கள் தங்கள் சொந்த லாபத்தை விட சமூகத்தின் நன்மைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். மாலை மண்ணூர் ராஜகுமாரன் உண்ணி குழுவினரின் நிறைவு சங்கீதக் கச்சேரி நடந்து. வினோத் பழயன்னூர் (வயலின்), ஆலுவா கோபாலகிருஷ்ணன் (மிருதங்கம்), நாராயணன் (கடம்), வெள்ளிநேழி ரமேஷ் (முகர்சங்) ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில்,  புரட்டாசி மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் ; புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியில் அனைத்து பைரவர் சன்னதிகளில் சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி திவ்ய தரிசன நிகழ்வு, பராமரிப்பு பணிகளுக்காக, 5 ... மேலும்
 
temple news
சென்னை; ‘‘கோவில்களால் கலைகள் வளர்க்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு உள்ளன,’’ என, செம்மொழி தமிழாய்வு மத்திய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar