கஞ்சமலை சித்தேஸ்வர ஸ்வாமி கோயில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2024 04:09
சேலம் ; கஞ்சமலை சித்தேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
சேலத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் கஞ்சமலை ஸ்ரீ சித்தேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் உள்ளதுஇந்த கோயிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று , காலை 10;00 மணியளவில்முகூர்த்த கால் நடப்பட்டது கோயில் சிவாச்சாரியார் சிறப்பு பூஜை செய்தார் முகூர்த்தக்கால் நடும்போது நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பயபக்தியுடன் வழிபட்டனர். அதனை தொடர்ந்து வரும் செப்டம்பர் 13ம் தேதி, மதியம் 12:00 மணிக்கு மேல் யாகம் செய்வதற்குரிய அக்னியை சூரிய பகவான் இடத்தில் இருந்து பெரும் நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 14ல், காலை 6:30 மணி அளவில், இரண்டாம் கால யாக பூஜை, மாலை 4:30 மணி அளவில் லட்சுமி பூஜை தீப பூஜை மூலிகைகளை கொண்டு யாகங்கள் நடைபெறும். மாலை 5:30 மணிக்கு மேல் 6:20க்குள் எந்திர நவரத்தின பஞ்சலோக மூல விக்ரஹ அஷ்ட பந்தன சாத்துதல் நடைபெறும். செப்டம்பர் 15ல், காலை 7:30 மணிக்கு மேல், 8 மணிக்குள் முருகனுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 7:30 மணிக்கு மேல் 8 15 மணிக்குள், காளியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு மேல் 10:45 மணிக்குள் மூலவர் சித்தருக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.