குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் 75 கிலோ பூக்களால் கிருஷ்ணரின் குழந்தை பருவ பூக்கோலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11செப் 2024 03:09
கேரளா; கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. கோவில் நுழைவாய் முன் ஓனம் பண்டிகையை முன்னிட்டு கேட்டை நாளான இன்று 75 கிலோ எடை கொண்ட பூக்களால் கிருஷ்ணரின் குழந்தை பருவம் பூக்கோலம் மிடப்பட்டது. இதை ஏராளமான மக்கள் கண்டு மகிழ்ந்தனர். ஓணம் பண்டிகை, வரும் 14, 15, 16 தேதிகளின் கொண்டாடப்பட உள்ளது.