Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வியாழக்கிழமைகளில் மவுனவிரதம் ... புளியடி மாரியம்மன் கோயில் புரட்டாசி திருவிழா ; பந்தல்கால் நடப்பட்டது புளியடி மாரியம்மன் கோயில் புரட்டாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா; யானை மீது புனித நீர் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
நாகை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா; யானை மீது புனித நீர் ஊர்வலம்

பதிவு செய்த நாள்

12 செப்
2024
01:09

நாகையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக யானை மீது புனித நீர் எடுத்து வரப்பட்டது. வெகு விமர்சையாக நடைபெற்ற புனித நீர் ஊர்வலத்தில், மேளதாளம் முழங்க, கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம் ஆடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வரும் 15ம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதற்காக சப்தவிடங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் இருந்து இன்று புனித நீர் யானையில் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கங்கை, யமுனை, சிந்து, கோதாவரி, நர்மதை உள்ளிட்ட 9, புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் யானை மேல் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இதில் நாதஸ்வர மேளக்கச்சேரி, ட்ரம்ஸ் இசையுடன், கரகாட்டம் மானாட்டம் மயிலாட்டம் ஒயிலாட்டம் சிலம்பாட்டம் கும்மியாட்டம் என களை கட்டியது. அப்போது முத்து மாரியம்மனுக்கு விரதம் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் மஞ்சளாடை அணிந்தவாறு முளைப்பாரி எடுத்தும், பால் குடம் சுமந்தும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக 5 கிலோமீட்டர் தூரம் உள்ள அக்கரைப்பேட்டை கோவில் வரை ஊர்வலமாக சென்றனர். புனித நீர் ஊர்வலத்தில், சிவன், பார்வதி, பச்சை காளி பவள காளி என மேளதாள வாத்தியங்களுக்கு ஏற்றவாறு வழியெங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் ஆட்டம் போட்டும், பாட்டுப்பாடியும் கும்மியடித்தும்  சென்றனர். இதைப்போல் சிறுவர், சிறுமியர் சிலம்பாட்டம் ஆடி உற்சாகத்துடன் புனித நீர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். விழாவில் நாகை, காரைக்கால் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத ... மேலும்
 
temple news
மதுரை;  தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, டவுன்ஹால் என். எச் .ரோடு சந்திப்பில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவிலில் புரட்டாசி முதல் ... மேலும்
 
temple news
கடலுார்; கடலுார் கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்; கோயில் நகரமாம் குச்சனூரில் அடிப்படை வசதிகளின்றி கோயிலிற்கு வரும் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar