Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேலை அலங்காரத்தில் மாமரத்து பெரிய ... சாத்துார் வெற்றி விநாயகர் கோயிலில் வருடாபிஷேக விழா சாத்துார் வெற்றி விநாயகர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூரம் கொள்ளாபுரியம்மன் கோவில் அருகே 17ம் நுாற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
கூரம் கொள்ளாபுரியம்மன் கோவில் அருகே 17ம் நுாற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

14 செப்
2024
11:09

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில் கொள்ளாபுரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே, நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய தலைவர் அஜய்குமார் கூறியதாவது: கூரம் கிராமத்தில், 17ம் நுாற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இந்த நடுகல், போர் படை தளபதியின் நடுகல். போர் படை தளபதியின் வலது மற்றும் இடது புறங்களில், இரு மனைவியர் உள்ளனர். மேலும், இந்த நடுகல்லில் இருக்கும் முகங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இருப்பினும், மூவரின் உடலில் ஆபரணங்களை காண முடிகிறது. குறிப்பாக, நடுகல்லில் இருக்கும் போர் படை தளபதியின் வலது கரத்தில் ஆயுதம் உள்ளது. வலது மற்றும் இடது புறம் இருக்கும் மனைவியரின் சிற்பங்களில், இடுப்புக்கு கீழே மடிப்புடன் கூடிய, ஆடை மற்றும் இடது புறத்தில் சாய்ந்த கொண்டையும், கைகளில் ஆபரணங்கள் மற்றும் பூ செண்டுகளை காண முடிகின்றன. இந்த சிலைகளின் அமைப்புகளை வைத்து பார்க்கும் போது, 17ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சிற்பம் என அறிய முடிகிறது. மேலும், இந்தப் பகுதியில் பல்லவர் காலத்தில் உருவாக்கிய வித்யா வினீத பல்லவ பரமேஸ்வர சிவன் கோவில் உள்ளது. அதேபோல், ஆதிகேசவ பெருமாள் கோவிலும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார். இதை தொடர்ந்து, இந்த நடுகல்லை மீட்டு பாதுகாக்க வேண்டும் என, வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி நகராட்சி அருகில் சப்தேழு கன்னிமார் கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா நடக்கிறது. ... மேலும்
 
temple news
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தரிசன திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar