Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலைக்கேணியில் கார்த்திகை விழா தேய்பிறை சஷ்டி; பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் தேய்பிறை சஷ்டி; பாலதண்டாயுதபாணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி கார்த்திகை பூஜை; பழநி முருகன் கோவிலில் நான்கு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
புரட்டாசி கார்த்திகை பூஜை; பழநி முருகன் கோவிலில்  நான்கு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

22 செப்
2024
11:09

பழநி; பழநி முருகன் கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை மற்றும் விடுமுறை நாளை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் திரண்டனர் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

பழநி‌ முருகன் கோவிலில், மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திர தினத்தன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது. நேற்று புரட்டாசி மாத கார்த்திகை நட்சத்திரம், ஞாயிறு விடுமுறை நாள் காரணமாக பக்தர்கள் திரளாக பழநி கோயிலுக்கு வருகை புரிந்தனர். அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பகலில் அதிக அளவில் பக்தர்கள் வந்ததால் பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசனத்தில் நான்கு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

மலைக்கோயிலில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் பக்தர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாயினர். ரோப் கார், வின்ச் ஸ்டேஷன்களில் பொதுமக்கள் கட்டண வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பக்தர்கள் படிப்பாதை மற்றும் யானை பாதை வழியாக மேலே ஏற அனுமதிக்கப்பட்டனர். கூட்டம் அதிகரித்ததால் கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாக அனுமதிக்கப்பட்டனர். அலைபேசி மலைக்கோயில் கொண்டு செல்ல தடை உள்ள நிலையில் பலர் அலைபேசிகளை மலைக் கோயிலுக்கு எடுத்துச் சென்று படம் பிடித்தனர்.

தங்கரத புறப்பாட்டில் கூட்டம்: மாலை சாயரட்சை கால பூஜை வேளையில் வெளிப்பிரகாரத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. உட்பிரகாரத்தில் தங்கமயில் வாகனத்தில் சின்ன குமாரசாமி எழுந்தருளினார். அதன் பின்ர தங்கரத புறப்பாட்டில் சின்னக் குமாரசுவாமி எழுந்தருளினார். தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் ஏராள மான பக்தர்கள் கலந்துகொண்டு, பலர் தங்கரதத்தை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கார்த்திகை நட்சத்திர தினத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. வெளியூர் பக்தர்கள் திரு ஆவினன்குடி அருகே போதுமான பார்க்கிங் வசதி இல்லாததால் சிரமம் அடைந்தனர். வெளியூர் செல்லும் பஸ்களுக்காக மாலை நேரத்தில் பஸ் ஸ்டாண்டில் பக்தர்கள் வெகு நேரம் காத்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar