திருப்பதியில் சாந்தி ஹோமம்; ஏழுமலையானுக்கு உகந்த ரோகிணி தினத்தில் கோவிலின் புனிதம் காக்க பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23செப் 2024 10:09
திருப்பதி; திருப்பதி லட்டு சர்ச்சையை தொடர்ந்து ஏழுமலையானுக்கு உகந்த ரோகிணி நட்சத்திரமான இன்று சாந்தி ஹோமம் நடைபெற்றது.
திருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு கலந்தது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில் கோவிலின் புனிதத்தை மீட்பதற்காக சாந்தி ஹோமம் செய்ய அரசு முடிவு செய்தது. அதன்படி ஏழுமலையானுக்கு உகந்த ரோகிணி நட்சத்திர தினமான இன்று காலை 6 மணிக்கு வேத விற்பன்னர்கள் கோவிலில் சாந்தி ஹோமம் தொடங்கினர். 10 மணிவரை நடைபெற்ற இந்த ஹோம பூஜையில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. புகழ்பெற்ற வேத வல்லுனர்கள் பலர் பங்கேற்று இந்த மகா சாந்தி ஹோமத்தை செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.