திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் அருகே திரு வைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு யாக வழிபாடு நடந்தது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் மூலபால காலபைரவர் சுவாமிக்கு தனி சன்னதியில் எழுந்தருளியுளளார். இவருக்கு தேய்பிறை அஷ்டமியன்று யாகத்துடன் சிறப்பு வழிபாடு நடைபெறும். மூலவரான மூலபால காலபைரவர் தங்க கவசத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து கணபதி பூஜை, மகா பைரவயாகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நெய், வஸ்திரம், மற்றும் புஷ்ப யாகத்தை நடத்தினர். பின்னர் மகாபூர்ணாகுதி தீபராதனை நடந்தது. யாகத்தில் உள்ள புனிதநீர் கலசங்களுகு்கு பல அலங்கார தீபாராதனைகள் நடந்தன. பின்னர் கலசங்கள் புறப்பாடாகி மூலவருக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன. ஏற்பாட்டினை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் ரவிசந்திரன், மஹா ஸ்வாமிநீ பீடம் பாண்டியராஜன் செய்தனர்.