கொடைக்கானல் பத்ரகாளியம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2024 07:09
கொடைக்கானல், கொடைக்கானல் டிப்போ பத்ரகாளியம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. இங்குள்ள கால பைரவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து சொர்ணாபிஷேகம், வடை மாலை சாத்துதல், பக்தர்கள் தேங்காய், மிளகு, நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலிலும் விழா விமர்சியாக நடந்தது.