புரட்டாசி சனி; ஹனுமந்த வாகனத்தில் அருள்பாலித்த வடபழனி ஆதிமூலப் பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2024 12:09
சென்னை; வடபழனி வடபழனி ஆதிமூலப்பெருமாள் கோயிலில் புரட்டாசி 2வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவருக்கு விசேஷ அலங்காரம் வழிபாடு நடைபெற்றது. காலை 6 மணிக்கு சுப்ரபாதம் (விஸ்வரூபம்), காலை 7.30 மணிக்கு திருவாராதனம், திருப்பாவை சேவை, காலை 8.15 மணிக்கு மூலவர் புஷ்ப அலங்கார சேவை தீபாராதனை, திருப்பாவை சாற்றுமறை, காலை 8.30 மணிக்கு உத்ஸவர் ஹனுமந்த வாஹனத்தில் ராமர் அலங்காரத்தில் எழுந்தருளினார். காலை 8.30 மணி முதல் 12 மணி வரை மூலவர் தரிசனம் (மண்டபத்தில் அர்ச்சனை) நடைபெற்றது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு திருக்காப்பு சேர்த்தல் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு ஏகாந்த சேவை நடக்கிறது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷத்துடன் பெருமாளை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.