பதிவு செய்த நாள்
28
செப்
2024
12:09
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் அருள்பாலித்தார்.
உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் ஸ்ரீ வேங்கடேச பெருமாள், ஸ்ரீ பத்மாவதி தாயார், ஸ்ரீ ஆண்டாள் தாயார் ஆகியோர் தனித்தனி சன்னதிகளிலும், எம்பெருமாள் அவதார மூர்த்திகளான, ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ தன்வந்திரி, ஆகியோரும் தனித்தனி சன்னதிகளிலும் அருள்பாலிக்கின்றனர். மேலும், ஸ்ரீஆஞ்சநேயர் மற்றும் ஆழ்வார்களுக்கும் தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளன. இக்கோவிலில் புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.