Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சந்தனகாப்பு அலங்காரத்தில் ... வால்பாறை; கருமலை பாலாஜி கோவிலில் புரட்டாசி சிறப்பு வழிபாடு வால்பாறை; கருமலை பாலாஜி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பருக்கு வெள்ளித்தேர் தயாரிக்க 100 கிலோ வெள்ளி வழங்கிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
நெல்லையப்பருக்கு வெள்ளித்தேர் தயாரிக்க 100 கிலோ வெள்ளி வழங்கிய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

29 செப்
2024
08:09

 சென்னை; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய வெள்ளித்தேர் செய்ய, 100 கிலோ வெள்ளிக் கட்டிகளை வழங்கி, வெள்ளித்தகடு வேயும் பணியை, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். அறநிலையத்துறை செயலர் சந்தரமோகன், ஆணையர் ஸ்ரீதரன் பங்கேற்றனர்.

பின், அமைச்சர் அளித்த பேட்டி: நெல்லையப்பர் கோவில் வெள்ளித்தேர், 1991ல் தீ விபத்து காரணமாக எரிந்து விட்டது. 33 ஆண்டுகளுக்கு பின் புதிய வெள்ளித்தேர் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, மரத்தேர் பணிகள் முடிந்துள்ளன.மரத்தேருக்கு வெள்ளி தகடுகள் வேயும் பணிக்கு, 450 கிலோ வெள்ளி தேவை. 9 கிலோ வெள்ளி நன்கொடையாளர்களால் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, நன்கொடையாளர்கள் ராஜரத்தினம், சபாபதி ஆகியோர், 100 கிலோ வெள்ளிக்கட்டிகளை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இதன் மதிப்பு, 1.2 கோடி ரூபாய். அடுத்தாண்டு ஜூலை மாதத்திற்குள் புதிய வெள்ளித்தேர் பயன்பாட்டுக்கு வரும். அறநிலையத்துறை கோவில்களில், 68 தங்கத் தேர்களும், 55 வெள்ளித் தேர்களும் உள்ளன. இந்த ஆட்சியில், 29 கோடி ரூபாய் மதிப்பில், 5 புதிய தங்கத் தேர்களும், 27.16 கோடி ரூபாய் மதிப்பில், ஒன்பது புதிய வெள்ளித் தேர்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மாநில வல்லுனர் குழுவால்,10,172 கோவில்களின் திருப்பணிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில், 10 ஆண்டுகளில், 1,000 கோவில்களுக்கு கூட, மாநில வல்லுனர் குழு ஒப்புதல் வழங்கவில்லை. மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, ‘இ- – பாஸ்’ முறையை செயல்படுத்துவது குறித்து, கோவில் நிர்வாகமும், காவல் துறையும் அறிவித்துள்ளன. ஆய்விற்கு பின், ‘இ- – பாஸ்’ தேவையில்லை என்றால் ரத்து செய்து விடுவோம். வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு, எளிதாக தரிசனம் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்வது குறித்து ஆலோசனைகள் வழங்க, துறையில் தனிப் பிரிவு அமைத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னையை சேர்ந்த ஆன்மிக எழுத்தாளர் அரவிந்த் சுப்பிரமணியம். அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்ட ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீமத் பொய்கையாழ்வார் சபை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் திருவள்ளுவர் தெருவில் வீரஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
 வால்பாறை; புரட்டாசி சனிக்கிழமையான நேற்று, வால்பாறை அடுத்துள்ள கருமலை பாலாஜி கோவிலில் சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, ஸ்ரீவாரி வெங்டாஜலபதி சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar