காஞ்சிபுரம்; தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில தேசிய இந்து திருக்கோவில்கள் பவுண்டேஷன் சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள கோவில்களில் உழவாரப் பணி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 314வது உழவாரப் பணியை, காஞ்சிபுரம் மாகாளேஸ்வரர் கோவிலில் நேற்று மேற்கொண்டனர். இதில், கோவில் வளாகத்தில் புதர்போல மண்டி கிடந்த செடி, கொடிகளை அகற்றினர். சன்னிதி கோபுரங்களின் மீது படிந்திருந்த துாசுகளை மின்மோட்டார் குழாய் வாயிலாக தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தப்படுத்தினர். மேலும், கோவிலில் உள்ள சிலைகள் மற்றும் பூஜை அலங்காரப் பொருட்களை சுத்தப்படுத்தினர்.