வடமதுரை; அய்யலூர் தீத்தாகிழவனூர் கோவில் தோட்டம் நியாய விநாயகர், பேசும் பழனிஆண்டவர், கானகத்து மாரியம்மன், இடும்பன், ஆதி சிவன், சேவுகபெருமாள் கோயிலில் 59வது ஆண்டு விழா நடந்தது. யாக வேள்வி பூஜைகள், தேன், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 48 வகை அபிஷேகங்கள், ஆராதனை, அன்னதானம் நடந்தன. மாலையில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சுவாமி ஊர்வலம் கடவூர் பிரிவு வரை சென்று அய்யலூர் கடை வீதி வழியே சன்னதி திரும்பியது. கோயில் குருசாமி வி.செந்தில்நாதன் தலைமையிலான விழா குழுவினர் ஏற்பாட்டினை செய்திருந்தனர்.