Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரை அய்யலூர் கோயிலில் ஆண்டு விழா ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் காணிக்கை எண்ணிக்கை ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா; தங்க கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா
எழுத்தின் அளவு:
பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா; தங்க கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா

பதிவு செய்த நாள்

08 அக்
2024
05:10

உளுந்தூர்பேட்டை; பாதூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில் சுவாமி தங்க கருட வாகனத்தில் வீதியுலா நடந்தது.


உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் கிராமத்தில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 2ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. அன்று ஸ்ரீ செல்வர் மேனாவில் புறப்பாடு நடந்தது. 3ம் தேதி இரவு ஹம்ச வாகனத்திலும், 4ம் தேதி இரவு சந்திர பிரபை வாகனத்திலும், 5ம் தேதி இரவு ஹனுமந்த வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடந்தது. 6ம் தேதி காலை திருப்பல்லாக்கு விசேஷ திருமஞ்சனம், ததியாராதனம் நடந்தது. இரு விசேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று காலை 11 மணியளவில் திருப்பல்லக்கில் பெருமாள் நாச்சியார் திருக்கோல சேவை விசேஷத் திருமஞ்சனம் ததியாராதனம் நடந்தது. இரவு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்க கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது சிறப்பு பூஜைகள் தீபாராதனை வழிபாடும் நடந்தது. 


இன்று காலை 8 மணி அளவில் ஸ்ரீமத்அஹோபிலம் மடம் ஸ்ரீமத் ஆதிவன் சடகோப யதிந்திர மஹா தேசிகன் திருவீதி புறப்பாடு, திருபல்லக்கு விசேஷ திருமஞ்சனம் ததியாராதனம், விசேஷ சாற்றுமுறை நடந்தது. நாளை (9ம் தேதி) மாலை 5 மணியளவில் சுவாமிக்கு திருக்கல்யாணமும், இரவு புஷ்ப பல்லக்கில் வீதியுலாவும் நடக்கிறது. 10ம் தேதி இரவு வேடுபரி குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 11ம் தேதி 7 மணியளவில் ரதோற்சவம் நடக்கிறது. வரும் 14ம் தேதி ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் திருவீதி புறப்பாட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா விஜயராகவா அய்யங்கார் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar