வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2024 10:10
கொட்டாம்பட்டி; ஒட்டக்கோவில்பட்டி டி வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் புரட்டாசி மாத திருவிழா நேற்று துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் ஆன நேற்று மந்தையில் இருந்து அம்மன் மூன்று பரிவார தேவதைகளுடன் தேரில் எழுந்தருளினார். பிறகு 5 கி.மீ., தொலைவில் உள்ள செல்வவிநாயகர் கோயிலுக்கு சுவாமிகள் கொண்டு செல்லப்பட்டது. இன்று (அக்.9) பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெறும்.பிறகு செல்வவிநாயகர் கோயிலில் இருந்து அம்மன் புறப்பட்டு மீண்டும் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். இவ் விழாவிற்கான ஏற்பாடுகளை கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.