பதிவு செய்த நாள்
21
அக்
2024
01:10
பல்லடம்; பல்லடம் பொன்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை அமைப்பதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா இன்று நடந்தது.
பல்லடம் கடைவீதியில், பழமை வாய்ந்த பொன்காளியம்மன் கோவில் உள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவில், பல ஆண்டுக்குப் பின் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு, திருப்பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. இதற்கிடையே, வரும் டிச.,5 அன்று கோவில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான, யாகசாலை அமைப்பதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா இன்று காலை 9.15க்கு துவங்கியது. முன்னதாக, சிறப்பு வேள்வி வழிபாடுகளை தொடர்ந்து, கோவை காமாட்சிபுரம் ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர் முகூர்த்தக்கால் நட்டு வைத்தார். இதையடுத்து, பொன்காளியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.