பதிவு செய்த நாள்
22
அக்
2024
03:10
சாயல்குடி; சாயல்குடியில் உள்ள அங்காள ஈஸ்வரி அம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117 வது ஜெயந்தி, 62 வது குருபூஜை விழா நடந்தது. அங்காள ஈஸ்வரி அம்மன் கோயிலில் கடந்த அக்., 15 அன்று காப்புகட்டுதலுடன் விழா துங்கியது. இன்று காலை 9:00 மணிக்கு அங்காள ஈஸ்வரி அம்மன் கோயிலில் இருந்து பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உருவச்சிலைக்கு பால்குடம் எடுத்து வந்து அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு முளைப்பாரி ஊர்வலம் நகரின் முக்கிய வீதியில் வலம் வந்தது. மூலவர் விநாயகர், அங்காள ஈஸ்வரி அம்மன், குருநாதர், முத்து இருளப்பசாமி, அக்னி வீரபத்திரசாமி, பாலமுருகன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவர் டாக்டர் ராம்குமார், துணைத் தலைவர் சுந்தர கணபதி, பொருளாளர் சொக்கலிங்கம், துணைச் செயலாளர் கோபி, சாயல்குடி முக்குலத்தோர் உறவின்முறை தலைவர் ராமர், செயலாளர் பச்சமால் பாண்டியன், பொருளாளர் சுப்ரமணியன், கணக்கர் பாலமுருகன் உள்ளிட்ட விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.