Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐப்பசி சோமவாரம்; ஞான ஈஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்டல மகர விளக்கு சீசனில் விற்க 40 லட்சம் அரவணை பாயாச கேன்கள் தயார் : தேவசம்போர்டு
எழுத்தின் அளவு:
மண்டல மகர விளக்கு சீசனில் விற்க 40 லட்சம் அரவணை பாயாச கேன்கள் தயார் : தேவசம்போர்டு

பதிவு செய்த நாள்

28 அக்
2024
11:10

கம்பம்; சபரிமலையில் மண்டல மகர விளக்கு சீசனை ஒட்டி 40 லட்சம் கேன் அரவணை பாயாசம் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.


தென் இந்தியாவில் பிரசித்தி பெற்ற கோயில்களில் சபரிமலை முதலிடம் பெறுகிறது . ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் கோயில் நடை திறந்து பக்தர்களுக்கு தரிசன வசதி செய்த போதும், ஆண்டு தோறும் நவம்பர் மாதம் இரண்டாவது வாரம் துவங்கி இரண்டு மாதங்கள் நடைபெறும் மண்டல மகர விளக்கு திருவிழாவே ஆண்டு திருவிழாவாகும். சபரிமலை வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது அரவணை பாயாசம் மற்றும் அப்பம் விற்பனை மூலம் கிடைக்கிறது. கடந்தாண்டு அரவணை பாயாசம் ௹, 146.99 கோடிக்கும் அப்பம் ௹. 17.77 கோடிக்கும் விற்பனையானது. இதற்கிடையே கடந்தாண்டு அரவணை பாயாசத்தில் பயன்படுத்தப்பட்ட ஏலக்காயில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக பூச்சி கொல்லி மருந்துகள் கலந்திருப்பதாக கூறி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, அவரவணை பாயாசம் விற்பனைக்கு கோர்ட் தடை விதித்தது. பின்னர் தேவசம் போர்டு உச்ச நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்தது. ஆய்வக பரிசோதனைக்கு பின் அரவணை பாயாசத்தை விற்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இருந்த போதும் தேவசம் போர்டு ரூ.5.5 கோடி மதிப்புள்ள 6.65 லட்சம் அரவணை பாயாசம் கேன்களை விற்கவில்லை. இதற்கிடையே வரும் நவ.16 ல் இந்தாண்டிற்குரிய சீசன் துவங்க உள்ளது. அக். 18 ல் அரவணை பாயாசம் உற்பத்தி துவங்கி தற்போது முதற்கட்டமாக 40 லட்சம் அரவணை பாயாசம் கேன்கள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. தினமும் 1.10 லட்சம் அப்பம் தேவைப்படும். எனவே தினமும் 1.25 லட்சம் அப்பம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் தெருவில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் ஐப்பசி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம், : எத்தனையோ அழிவு முயற்சிகள் நடந்தாலும் இன்றும் சனாதன வைதீக தர்மம் நிலைத்து நிற்பதற்கு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சியம்மனின் ஜென்ம தினத்தையொட்டி, காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; துாத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில், பாகம்பிரியாள் உடனுறை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar