Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அண்ணாமலையார் பெரிய ... திருமலைக்கேணியில் சூரசம்ஹாரம்; சூரனை வதம் செய்த சுப்பிரமணிய சுவாமி திருமலைக்கேணியில் சூரசம்ஹாரம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழனி முருகன் கோயிலில் வள்ளி தேவசேனா சமேத சண்முகர் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பழனி முருகன் கோயிலில் வள்ளி தேவசேனா சமேத சண்முகர் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

08 நவ
2024
10:11

பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோவில் கந்தசஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை 6:00 மணிக்கு மலை அடிவாரம் கிரிவீதியில் நடந்த சூரசம்ஹாரத்தில் ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷங்களை எழுப்பி தரிசித்தனர். இன்று வள்ளி தேவசேனா சமேத சண்முகர் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் நவ., 2ல் துவங்கியது. இதையடுத்து அன்று யானை படிப்பாதை வழியாக கோவில் யானை கஸ்துாரி முருகன் கோவில் சென்றது. விழாவில் தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்த நிலையில் நேற்று (நவ., 7) அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடந்தது. மதியம் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்க மலைக்கொழுந்து அம்மனிடம் வேல்வாங்குதல் நடந்தது. இதையடுத்து நேற்று  பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் சின்னகுமாரசுவாமி சூரசம்ஹரத்திற்காக பாத விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டார். அங்கு வடக்கு கிரிவீதியில் தாரகாசுரன், கிழக்கு கிரிவிதியில் பானுகோபன், தெற்கு தெரு வீதியில் சிங்கமுகாசூரன், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் நிற்க சூரசம்ஹாரம் நடந்தது.

பின் முருகன் கோவிலில் இரவு சம்ரோட்சன பூஜை பின் அர்த்தஜாமபூஜை நடந்தது. இன்று காலை 9:30 மணிக்கு முருகன் கோவிலில் வள்ளி, தெய்வானை உடன் சண்முகருக்கு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 8:20 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி, தெய்வானை உடன் முத்துக்குமாரசுவாமிக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. பின் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், தியாகி வடிவேல் நகரில் அமைந்துள்ள சீரடி குபேர சாய்பாபா ஆலயத்தின் 4ம் ... மேலும்
 
temple news
கோவை; ஆனி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சேலம்; சேலம், கன்னங்குறிச்சியைச் சேர்ந்த சிற்பி, ஸ்தபதி ராஜா, 66; பஞ்சலோக சிலை மற்றும் பழமையான கோவில்களை ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை, விராட்டிபத்து முத்தாலம்மன் கோயிலை மக்கள் எதிர்ப்புக்கு இடையே போலீஸ் பாதுகாப்புடன் ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை; ஊத்துக்கோட்டை அருகே திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில், 300க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar