Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூணாறு சுப்பிரமணியசுவாமி கோயிலில் ... சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் திருக்கல்யாணம் சின்னாளபட்டி சதுர்முக முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் திருக்கல்யாணம்; மொய் எழுதி வழிப்பட்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
திருச்செந்தூரில் திருக்கல்யாணம்; மொய் எழுதி வழிப்பட்ட பக்தர்கள்

பதிவு செய்த நாள்

09 நவ
2024
08:11

திருச்செந்துார்; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி குமரவிடங்கபெருமான் தெய்வானை அம்மன் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 2ம் தேதி கந்தசஷ்டி திருவிழா துவங்கியது. இத்திருவிழாவின் 7ம் நாளான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை , உதய மார்த்தாண்ட அபிஷேகம் அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. அதிகாலை 5.30 மணிக்கு தெய்வானை அம்மன் தபசு காட்சிக்கு புறப்பட்டு தெப்பக்குளம் முருக மடத்தில் எழுந்தருளினார். மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான் தங்க மயில் வாகனத்தில் கோவிலிலிருந்து எழுந்தருளி, முருகமணடபத்திற்கு வந்தார். அங்கு தெய்வானை அம்மனுக்கு நேற்றுமாலை காட்சி கொடுத்த பின் தீபாராதனை நடந்தது. தெற்கு ரத வீதி சந்திப்பில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்மன் நேர் எதிரெ எதிரெ நிற்க தோள் மாலை மாற்றும் வைபவம் நடந்தது. சுவாமி குமரவிடங்க பெருமானை, தெய்வானை அம்மன் 3முறை சுற்றி வந்தார். பின்னர் சுவாமி, அம்மனுக்கு தோள் மாலை மற்றும் பட்டு வஸ்திரங்கள் மாற்றப்பட்டன. தொடர்ந்து சுவாமிக்கு, அம்மனுக்கு ஒரே நேரத்தில் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்மன் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி ரத வீதிகள் வழியாக உலா வந்து கோவிலை சேர்ந்தார். பின்னர் இரவு ராஜகோபுர திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான் – தெய்வானை அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாணத்தில் பக்தர்கள் மொய் எழுதி வழிப்பட்டனர். பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, சுவாமி படம் அடங்கி பிரசாதம் வழங்கப்பட்டது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்; சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், இன்று கருட சேவை உற்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar