கார்த்திகை சோமவார விழா; காஞ்சிபுரம் சத்யநாத சுவாமி வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09டிச 2024 02:12
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் திருக்காலிமேடில், பழமையான சத்யநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கார்த்திகை மாத நான்காவது சோமவார விழா இன்று நடந்தது. இதில், காலை 7:00 மணிக்கு சுவாமிக்கும், பிரமராம்பிகைக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து பிரமராம்பிகையுடன், மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் சத்யநாதேஸ்வரர், வடக்கு மாட வீதி, கவரை தெரு, சவுராஷ்டிரா தெரு, பாலாஜி நகர், அல்லாபாத் ஏரிக்கரை வழியாக சின்ன காஞ்சிபுரம் பகுதியில் வீதியுலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து சுவாமி வழிபட்டனர்.