Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news டிச., 16 முதல் ஜன., 31 வரை ராமேஸ்வரம் ... பக்தர்கள் காலை பதம் பார்க்கும் மாலைக்கோவில் பாதை பக்தர்கள் காலை பதம் பார்க்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜம்புலிப்புத்தூர் கோயில் தெப்பத்தில் கழிவு நீர் கலப்பதால் பாதிப்பு
எழுத்தின் அளவு:
ஜம்புலிப்புத்தூர் கோயில் தெப்பத்தில் கழிவு நீர் கலப்பதால் பாதிப்பு

பதிவு செய்த நாள்

10 டிச
2024
05:12

ஆண்டிபட்டி; ஜம்புலிபுத்தூர் கதலிநரசிங்கப்பெருமாள் கோயில் தெப்பத்தில் கழிவு நீர் கலப்பதால் தேங்கும் நீருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.


ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் 800 ஆண்டுகள் பழமையானது. ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடக்கும் சித்திரை திருவிழாவில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுப்பர். இந்த ஆண்டு துவக்கத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் கோயிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஜூலை 12ல் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் முன்புறம் உள்ள தெப்பக்குளம் உபயதாரர் மூலம் ரூபாய் பல லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு தெப்பத்திற்கு பாதுகாப்பு வேலியும் உள்ளது. கோயில் வளாகத்தில் இருந்து வெளியேறும் நீர் குழாய் மூலம் தெப்பத்தில் தேக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களில் பெய்த மழையில் தற்போது தெப்பத்தில் பாதி அளவுக்கு மேல் மழை நீர் தேங்கியுள்ளது. தேங்கிய மழை நீருடன் ஜம்புலிப்புத்தூர் தெருக்களில் இருந்து வரும் கழிவு நீரும் தெப்பத்தில் சேரும்படி மண்வாய்க்கால் அமைத்துள்ளனர். இதனால் கழிவு நீரும் மழை நீருடன் தெப்பத்தில் சேர்ந்து தண்ணீரின் தன்மை மாறி உள்ளது. தெப்பத்து நீரில் மிதக்கும் குப்பையும் அகற்றப்படவில்லை. தெப்பக்குளத்தில் தேங்கும் நீரை புனித நீராக பக்தர்கள் தலையில் தெளித்து வந்தனர். தற்போது கழிவுநீர் கலந்துள்ளதால் அதில் வளரும் மீன்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தெப்பத்தில் சேரும் கழிவுநீரை தடுக்க ஹிந்து அறநிலையத்துறை, ரெங்கசமுத்திரம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar