Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் பகவான் ரமணரின் 145ம் ... குன்னூர் வெங்கடாசலபதி கோவிலில் கிருஷ்ணர் சிலை பிரதிஷ்டை குன்னூர் வெங்கடாசலபதி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை உத்தரவு பெட்டியில் திருவோட்டில் விபூதி - ருத்ராட்சம்!
எழுத்தின் அளவு:
சிவன்மலை உத்தரவு பெட்டியில் திருவோட்டில் விபூதி - ருத்ராட்சம்!

பதிவு செய்த நாள்

18 டிச
2024
10:12

திருப்பூர்:சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், விபூதி நிறைந்த திருவோடு, ஒரு ருத்ராட்சம் மற்றும் திருப்புகழ் மருந்து புத்தகம் வைத்து சிறப்பு பூஜை நடந்தது.


திருப்பூர் மாவட்டம், காங்கயம் - சிவன்மலை ஸ்ரீசுப்பிரமணியர் கோவிலில், ஆண்டவர் உத்தரவு பெட்டி வழிபாடு நடைமுறையில் உள்ளது. முருகப்பெருமான், பக்தர்கள் கனவில் தோன்றி உணர்த்தும் பொருட்கள், ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைத்து வழிபடுவது வழக்கமாக இருக்கிறது. நவ., 12ல் விளக்கு வைத்து வழிபாடு நடந்தது. கடந்த, 9ம் தேதி சிறிய கலசத்துடன் கங்கை தீர்த்தம் வைத்து பூஜை நடந்து வந்தது. இந்நிலையில், உசிலம்பட்டியை சேர்ந்த பக்தர் குடும்பத்தினர் சார்பில், புதிய பொருட்கள் வைக்கப்பட்டன. 


சிவன்மலை கோவில் சிவாச்சார்யார்கள் கூறியதாவது: கங்கை தீர்த்தம் வைத்த, 11வது நாளில் பொருள் மாறியுள்ளது. தற்போது, திருவோடு நிறைய விபூதியும், அதன் மீது ருத்ராட்சமும் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், நோய் தீர்க்கும் பதிகம் அடங்கிய திருப்புகழ் மருந்து என்ற புத்தகமும் வைக்கப்பட்டுள்ளது. விபூதியும், ருத்ராட்சமும் நோய் தீர்க்கும் மருந்து என்பதை முருகப்பெருமான் உணர்த்தியிருக்கிறார். ருத்ராட்சம் அணிந்து, விபூதி தரித்து இறைவழிபாட்டில் பங்கேற்க வேண்டும். செவ்வாய் கிழமை திருப்புகழ் பாடினால் தீராத வினை தீரும் என்பர். செவ்வாய்க்கிழமை உத்தரவு பெட்டி பொருள் மாறியுள்ளதால், வீட்டிலும், விபூதி மற்றும் உத்ராட்சம் வைத்து, திருப்புகழ் பாடல்களை பாராயணம் செய்து இறையருள் பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar