Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அபிநவ வித்யா சங்கர பாரதி சுவாமிகள் ... ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு மணி நேரத்தில் 72 மில்லி மீட்டர் மழை; கோயிலில் புகுந்த மழை நீர் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு மணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் 28.9 கிலோ தங்கம்; முதலீட்டுக்காக எஸ்.பி.ஐ.,யிடம் ஒப்படைப்பு
எழுத்தின் அளவு:
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் 28.9 கிலோ தங்கம்; முதலீட்டுக்காக எஸ்.பி.ஐ.,யிடம் ஒப்படைப்பு

பதிவு செய்த நாள்

18 டிச
2024
05:12

பொள்ளாச்சி; ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், காணிக்கையாக பெறப்பட்ட, 28 கிலோ, 906 கிராம் பொன் இனங்கள், எஸ்.பி.ஐ., அதிகாரிகளிடம், தங்க பத்திர முதலீட்டுக்காக ஒப்படைக்கப்பட்டது.


தமிழக சட்டசபையில், ஹிந்துசமய அறநிலையத்துறை, 2021 – 22 மானிய கோரிக்கையின் போது, கடந்த, 10 ஆண்டுகளாக கோவில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பொன் இனங்களை மும்பையில் உள்ள  மத்திய அரசுக்கு சொந்தமான தங்க உருக்கு ஆலையில் உருக்கி, சொக்க தங்கமாக மாற்றி கோவிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில், வங்கியில் முதலீடு செய்யப்படும் என, அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். இப்பணிகளுக்காக, ஹிந்துசமய அறநிலையத்துறை சார்பில், மூன்று மண்டலங்களாக பிரித்து, மூன்று குழுக்ககள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு மண்டலத்துக்கும் உச்சநீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரும், சென்னை உயர்நீதி மன்றத்தில் பணி ஓய்வு பெற்ற நீதிபதி இருவரும் அந்த குழுக்களுக்கு தலைவர்களாக உள்ளனர். இந்நிலையில், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற தங்கத்தை, கோவில் உபயோகத்துக்கு தேவையில்லாத கல் அரக்கு, அழுக்கு போன்றவற்றை நீக்கி, பொன் இனங்களை தரம் பிரித்து எடை போடும் பணி, கடந்த மே மாதம் மேற்கொள்ளப்பட்டது. அதில், 28 கிலோ, 906 கிராம் எடை கொண்ட பலமாற்று பொன் இனங்கள், மூன்று பெட்டிகளில் வைத்து இலாகா முத்திரையிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.


பிரித்தெடுக்கப்பட்ட பொன் இனங்கள், உருக்கி தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில், பாரத ஸ்டேட் வங்கி வாயிலாக, மும்பையில் உள்ள மத்திய அரசின் தங்க உருக்கு ஆலைக்கு அனுப்பி வைக்கும் பணி கோவில் வளாகத்தில் இன்று நடந்தது. உச்சநீதிமன்ற நீதிபதி (ஓய்வு) துரைசாமிராஜூ தலைமை வகித்தார். அமைச்சர் சேகர்பாபு பொன் இனங்களை, வங்கி மண்டல பொதுமேலாளர் நவீன் டேவிட்ஸ், ஆனைமலை கிளை மேலாளர் பிரேமா, பிராந்திய முதுநிலை மேலாளர் செந்தில்குமார் ஆகியோரிடம் ஒப்படைத்தார். கோவை இணை ஆணையர் ரமேஷ்,  சரிபார்ப்பு இணை ஆணையர் வான்மதி, துணை ஆணையர் (சரிபார்ப்பு) விஜயலட்சுமி, அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். தங்க பத்திர முதலீடு செய்து கிடைக்கும் வட்டி, கோவில் வருவாயில் சேர்க்கப்படும் என, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மழை வேண்டி எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு மற்றும் அசைவ ... மேலும்
 
temple news
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும் பிரதான சிறப்பும் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar