Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி மஹா ஸ்வாமிகள் 31வது வார்ஷிக ... ‘கும்பகோணம் கோயில்கள்’  புத்தகம் வெளியீட்டு விழா ‘கும்பகோணம் கோயில்கள்’ புத்தகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு தமிழக வனப்பகுதி வழியாக ரோடு வசதி
எழுத்தின் அளவு:
மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு தமிழக வனப்பகுதி வழியாக ரோடு வசதி

பதிவு செய்த நாள்

28 டிச
2024
10:12

கூடலுார்; மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு லோயர்கேம்ப் பளியன்குடியில் இருந்து தமிழக வனப்பகுதி வழியாக ரோடு அமைக்க வேண்டும் என வாணியர் சங்கத்தினர் பார்வையிட்டு வலியுறுத்தினர்.


தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். இக்கோயில் அமைந்துள்ள பகுதி யாருக்கு சொந்தம் என்பதில் தமிழக கேரளா மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. கோயில் பராமரிப்பின்றி அழிந்து வருகிறது. தமிழக வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலை தொல்லியல் துறை சார்பில் விரைவில் சீரமைக்க வேண்டும் என மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர், பக்தர்கள் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே சித்ரா பவுர்ணமி தினத்தன்று விழா நடைபெறும். இவ்விழாவிற்கு தமிழக கேரள மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்வார்கள்.


கேரளா கெடுபிடி; குமுளியிலிருந்து கேரள வனப்பகுதி வழியாக 14 கி.மீ., துார ஜீப் பாதை உள்ளது. இது தவிர தமிழக வனப்பகுதி பனியன்குடி வழியாக 6.6 கி.மீ., தூரத்தில் நடைபாதை உள்ளது. நடந்து செல்ல முடியாதவர்கள் கேரளாவில் உள்ள ஜீப் பாதையை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் விழா நடப்பதற்கு முன்பு இரு மாநில கலெக்டர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி அதன்படி விழா நடத்தப்படும். கேரள வனத்துறையின் பல்வேறு கெடுபிடிகளுக்கு இடையே விழா நடப்பதால் தமிழக வனப்பகுதி வழியாக ரோடு அமைக்க வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


வாணியர் சங்கம் ஆய்வு; இந்நிலையில் நேற்று தென்னிந்திய வாணியர் சங்கம் மற்றும் தேனி மாவட்ட வாணியர் சங்கத்தினர் பளியன்குடியில் இருந்து கோயிலுக்கு செல்லும் வனப்பாதையை பார்வையிட்டனர். ஏற்கனவே பாதை அமைக்க ஆய்வு செய்வதற்கு அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை ரோடு அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உடனடியாக பளியன்குடி மற்றும் தெல்லுக்குடி வனப்பாதையை ஆய்வு செய்து, சித்ரா பவுர்ணமி தினத்திற்கு முன்பு ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத்தினர் வலியுறுத்தினர். மாநில தலைவர் காந்தி, மாவட்டத் தலைவர் சுந்தரவடிவேல், மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை பொருளாளர் முருகன், நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar