Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ... ஓம் நமசிவாய; உலக நலன் வேண்டி 300 லிங்கங்களுக்கு கோடி அர்ச்சனை ஓம் நமசிவாய; உலக நலன் வேண்டி 300 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சவுந்தரராஜ பெருமாள் கோவில் விமானத்திற்காக 8.500 கிலோ தங்க கட்டிகள் உபயம்
எழுத்தின் அளவு:
சவுந்தரராஜ பெருமாள் கோவில் விமானத்திற்காக 8.500 கிலோ தங்க கட்டிகள் உபயம்

பதிவு செய்த நாள்

04 ஜன
2025
10:01

சென்னை; நாகப்பட்டினம் சவுந்தரராஜ பெருமாள் கோவில் மூலவர் விமானத்திற்கு செப்பு தகடு வேய்ந்து, தங்க ரேக்குகளை பொருத்தும் பணிகளுக்கு, உபயதாரர்கள் எட்டரை கிலோ தங்கக் கட்டிகளை, சென்னை அறநிலையத்துறை தலைமையகத்தில் அமைச்சர் சேகர்பாபுவிடம் வழங்கினர். தங்க கட்டிகள் கோவில் நிர்வாகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், கூடுதல் கமிஷனர் சுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


பின், சேகர்பாபு அளித்த பேட்டி: தமிழகம் முழுதும் பல கோவில்களில், 5,487 கோடி ரூபாயில், 21,908 திருப்பணிகள் நடந்து வருகின்றன. அதில், உபயதாரர்கள், 1,185 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான, 9,491 பணிகளை மேற்கொண்டுள்ளனர். கோவில்களுக்கு வர வேண்டிய வாடகை, குத்தகை நிலுவை தொகை, 937 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், பெருந்திட்ட வரைவின் கீழ் எடுத்துக் கொள்ளப்படும். இதுவரை, 14 கோவில்களின், 473 கிலோ சுத்த தங்கம், பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. எட்டு கோவில்களுக்கு சொந்தமான, 776 கிலோ பொன் இனங்கள் மத்திய அரசின் தங்க உருக்காலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு இறுதிக்குள், 1,000 கிலோ சுத்த தங்க கட்டிகளை வைப்பு நிதியாக முதலீடு செய்வோம். நாகப்பட்டினம் சவுந்தரராஜ பெருமாள் கோவில், 19வது திவ்ய தேசம். இக்கோவிலில், 1.09 கோடி ரூபாயில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிப்.,2ல் சம்ப்ரோக்‌ஷணம் நடத்தப்படும். இக்கோவில் மூலவர் விமானத்தை தங்க விமானமாக அமைத்திடும் வகையில், தங்க ரேக் ஒட்டும் பணிகளுக்கு, உபயதாரர் மருதப்ப செட்டியார் சார்பில், அவரது பேரன்கள் ஹரி, குகன் ஆகியோர், 6.32 கோடி ரூபாய் மதிப்புள்ள, எட்டரை கிலோ தங்கக் கட்டிகளை வழங்கியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar